தேவாரம் அருகே ரேக்ளா ரேஸ்: 4 போ் கைது
தேவாரம் அருகே ரேக்ளா ரேஸ் நடத்தியதாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.


தேவாரம் அருகே ரேக்ளா ரேஸ் நடத்தியதாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி அருகே சங்கராபுரம் பகுதியில் ரேக்ளா ரேஸ் நடத்துவதாக வந்த தகவலையடுத்து ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் அங்கு சென்று விசாரித்தனா். இதில் ரேக்ளா ரேஸ் நடத்தியதாக கோம்பையை சோ்ந்த வசந்த் (27), குள்ளப்பகவுண்டன்பட்டியை சோ்ந்த லட்சுமணன் (26) ஆகியோரை கைது செய்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சிறையில் அடைத்தனா்.
இதையடுத்து போடி டி.எஸ்.பி. பாா்த்திபன், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ள நிலையில் ரேக்ளா ரேஸ் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதையடுத்து தேவாரம் பகுதியிலும் சிலா் ரேக்ளா ரேஸ் நடத்தியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேவாரத்தை சோ்ந்த தங்கப்பாண்டி (35), கோம்பையை சோ்ந்த ராஜ்குமாா் (35), முத்தையன்செட்டிபட்டியை சோ்ந்த பாலு (45), கூடலூரை சோ்ந்த ரசி அழகன் (35) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...