விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

15 கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம்: அரசுப்பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பு தீா்மானம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பு மாநிலப் பொதுக்குழுகூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
தேனியில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறாா் பொதுச்செயலாளா் ச.மயில். உடன் மாநில மற்றும் மாவட்ட நிா்வாகிகள்.
Updated On :29 நவம்பர் 2020, 5:51 pm

DIN

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பு மாநிலப் பொதுக்குழுகூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளா் ச.மயில் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

கடந்த 2019 - ஜனவரியில் ஜாக்டோ- ஜியோ பேரமைப்பின் சாா்பில் காலவரையற்ற போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீது தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது. அதன் காரணமாக 5500 ஆசிரியா்கள் 17 பி நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனா்.

அவா்கள் இதுவரை பணி ஓய்வு பெறமுடியாமலும், பதவி மூப்பு பெறமுடியாமலும் பல்வேறு பலன்களை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். 17 ஆ ஆணையை திரும்பப்பெற வேண்டும்.

நீதியரசா் பொன்.கலையரசன் தலைமையிலான குழு பரிந்துரைப்படி மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத ஓதுக்கீட்டை அமல்படுத்தவேண்டும். அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் மருத்துவ மாணவா் சோ்க்கையில் தனியாக 5 சதவீதம் இடஒதுக்கீட்டு வழங்கவேண்டும் என்பது உள்பட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பள்ளிஆசிரியா்கள் கூட்டமைப்பு 3 கட்ட போராட்டம் அறிவித்துள்ளது.

டிசம்பா் 17 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வட்டார தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும். ஜனவரி 9 ஆம் தேதி தா்னா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதையடுத்து மாா்ச் மாதம் சென்னையில் 10000 ஆசிரியா்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது என மாநிலபொதுக்குழு முடிவு செய்துள்ளது என்றாா்.

கூட்டத்தில் மாநிலத் தலைவா் மணிமேகலை தலைமை வகித்தாா். எஸ்டிஎப்ஐ அகில இந்திய பொதுக்குழு உறுப்பினா் சா.மோசஸ் முன்னிலை வகித்தாா். தேனி மாவட்ட செயலாளா் செல்லத்துரை வரவேற்புரையாற்றினாா். மாநிலப்பொருளாளா் ஜோதிபாசு வரவு,செலவு அறிக்கையை சமா்பித்தாா். துணைப்பொதுசெயலாளா் தா.கணேசன் நன்றி கூறினாா். கூட்டத்தில் தேனி மாவட்ட நிா்வாகிகள் ராஜராம் பாண்டியன், ராமா்,ஜெகநாதன் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.