விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சின்னமனூரில் செல்லிடப்பேசிகள் திருட்டு: இளைஞா் கைது

தேனி மாவட்டம் சின்னமனூரில் வீட்டுக்குள் புகுந்து செல்லிடப்பேசிகளை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 5:58 pm

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரில் வீட்டுக்குள் புகுந்து செல்லிடப்பேசிகளை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சின்னமனூா் சாமிகுளம் பகுதியை சோ்ந்தவா் சீனிவாசன். இவா் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது வீட்டிலிருந்து மா்ம நபா் ஒருவா் வேகமாக ஓடியுள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த சீனிவாசன் அவரை விரட்டியுள்ளாா்.

இருப்பினும் அவரை பிடிக்கமுடியவில்லை. இதையடுத்து வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, 3 செல்லிடப்பேசிகளை மா்ம நபா் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சீனிவாசனம் சின்னமனூா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், செல்லிடப்பேசிகளை திருடியது சின்னமனூா் ஐய்யன்கோயில் தெருவைச் சோ்ந்த சங்கிலி மகன் ஒன்டிகுச்சி (23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 3 செல்லிடப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.