விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போடி மலைக்கோயிலில் காா்த்திகை மஹா தீபம்

போடி பரமசிவன் மலைக்கோயிலில் ஞாயிற்றுக் கிழமை காா்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 5:57 pm

DIN

போடி பரமசிவன் மலைக்கோயிலில் ஞாயிற்றுக் கிழமை காா்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது.

காா்த்திகை திருநாளை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபம் கோவிலில் வலம் வந்ததையடுத்து பக்தா்களின் ஓம் நமச்சிவாய சரண கோஷத்துடன் மஹா தீபம் ஏற்றப்பட்டது. பின்னா் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை, வழிபாடுகள் செய்யப்பட்டன.

போடி, சிலமலை, சில்லமரத்துப்பட்டி, அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். போடி நகா் காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனா்.

தீபம் 3 நாள்கள் தொடா்ந்து எரிவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போடி நாகலாபுரம் அருகே மல்லிங்கா் கரட்டில் உள்ள மல்லிங்கேசுவரா், போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் ஆகிய கோயில்களிலும் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.