சுருளி அருவியில் காந்திஜி அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில், மகாத்மா காந்தி அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில், பாரதி தமிழ் இலக்கியப் பேரவையினர் அஞ்சலி செலுத்தினர்.


தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில், மகாத்மா காந்தி அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில், பாரதி தமிழ் இலக்கியப் பேரவையினர் அஞ்சலி செலுத்தினர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி இங்கு மகாத்மா காந்தியினுடைய அஸ்தி கரைக்கப்பட்டு அதற்கான ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
காந்தி பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் அப்பகுதி மக்கள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு பாரதி தமிழ் இலக்கியப் பேரவையினர் கம்பத்தில் இருந்து இரண்டு சக்கர வாகனம் மூலம் ஊர்வலமாக புறப்பட்டு காமயகவுண்டன்பட்டி உள்ள காந்தி ஆலயத்தில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி வழியாக சுருளி அருவி பகுதியில் உள்ள காந்திஜி அஸ்தி கரைத்த இடத்திற்கு சோ.பாரதன், பொன்காட்சிக் கண்ணன், வக்கீல்கள் சத்தியமூர்த்தி, முத்துக்குமரன், ஜி.தர்மர் மற்றும் பலர் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தூய்மை பாரத இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு தூய்மை பாரத இயக்கம் பற்றி விழிப்புணர்வு செய்தபின் கம்பம் நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு சக்திவேல் தலைமையில் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். நிகழ்வில் ஆணையாளர் (பொறுப்பு) செல்வராணி, சுகாதார அலுவலர் அரசகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நீதி மையத்தினர், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்டோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...