திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குமுளி சோதனைச்சாவடியில் ஊழியர்கள் பற்றாக்குறையால் தொழிலாளர்கள் அவதி

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்திற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பல மணி நேரமாக குமுளியில் காத்திருந்து செல்வதால், உணவு, தண்ணீரின்றி அவதியடைந்து வருகின்றனர்.

News image
வரிசையில் காத்திருக்கும் தொழிலாளர்கள்
Updated On :2 அக்டோபர் 2020, 12:33 pm

DIN

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்திற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பல மணி நேரமாக குமுளியில் காத்திருந்து செல்வதால், உணவு, தண்ணீரின்றி அவதியடைந்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் வழியாக  கேரளத்திற்கு  செல்லும் தொழிலாளர்கள் குமுளி சோதனை சாவடிக்கு செல்கின்றனர். தமிழக எல்லையான பேருந்து நிலையம் வரை வரிசையாக நிற்கின்றனர். அங்கு முதல் கட்டமாக அவர்களது இ பாஸ், ஆதார் அட்டை பரிசோதிக்கப்படுகிறது. பின்னர் கரோனாவுக்கான சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, தனியாக அமர வைக்கப்படுகின்றனர். சளிமாதிரியின் முடிவுகள் வந்ததும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்த பரிசோதனைகள் முடியவே சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாகிறது. ஆண், பெண், முதியோர், குழந்தைகள் வரிசையில் காத்திருந்து செல்கின்றனர். இவர்களுக்கு தமிழக எல்லையில் தேநீர், உணவு கடைகள் கிடையாது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் நிலை பரிதாபமாக உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களும் தமிழக எல்லையில் கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களை சோதனை செய்கின்றனர், தாமதம் பற்றி தமிழக அலுவலர்களிடம் கேட்ட போது,  கேரள சோதனைச்சாவடியில் வருவாய், சுகாதார பணியாளர்கள் குறைவான நபர்களே பணியாற்றுகின்றனர். இதனால் தாமதம் ஏற்படுகிறது. தேனி மாவட்டம் வழியாக வருபவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தேனி மாவட்ட நிர்வாகம் தற்காலிக கூரை அமைத்து, குடிதண்ணீர் வசதி மட்டும் கூட செய்து தந்தால் போதுமானது என்றார். மேலும் தேனி மாவட்ட ஆட்சியர், இடுக்கி மாவட்ட ஆட்சியருடன் பேசி விரைவாக சோதனைகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.