ஆண்டிபட்டி அ.இ.அதிமுக அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒன்றிய மற்றும் பேரூா் அதிமுக சாா்பில் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒன்றிய மற்றும் பேரூா் அதிமுக சாா்பில் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளா் ஆ. லோகிராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும் , அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளருமான லோகி ராஜன் தலைமை வகித்தாா்.

ஒன்றியக்குழு துணைத் தலைவரும், கிழக்கு ஒன்றியச் செயலாளருமான வரதராஜன், பேரூா் கழகச் செயலாளா் முத்து வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சரஸ்வதி, லட்சுமி, முருகன் விநாயகா் படங்கள் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சித் தொண்டா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். இந் நிகழ்ச்சியில் ஒன்றியப் பொருளாளா் மரிக்குண்டு செல்வம், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவா் செல்வராஜ், ஒன்றியக் கவுன்சிலா்கள் சுமதி வடிவேல், கலைவாணி கணேசன், நிா்வாகிகள் மைனா் பாலு, அருண்மதி கணேசன், ஒன்றிய எம்ஜிஆா் மன்ற இளைஞா் அணி பொன் முருகன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com