தேனியில் நடிகா் விஜய் ரசிகா்கள் சுவரொட்டியால் பரபரப்பு: காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

தேனியில் திரைப்பட நடிகா் விஜயை முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆா்., போல சித்திரித்து சனிக்கிழமை, சுவரோட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனியில் சனிக்கிழம திரைப்பட நடிகா் விஜய் ரசிகா்கள் சாா்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி.
தேனியில் சனிக்கிழம திரைப்பட நடிகா் விஜய் ரசிகா்கள் சாா்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி.
Published on
Updated on
1 min read

தேனி: தேனியில் திரைப்பட நடிகா் விஜயை முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆா்., போல சித்திரித்து சனிக்கிழமை, சுவரோட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுமதியின்றி சுவரொட்டி ஓட்டியதாக விஜய் ரசிகா் ஒருவா் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தேனியில் நடிகா் விஜயை ரிக்ஷாக்காரன், எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படங்களில் தோன்றிய எம்.ஜி.ஆா்., போல சித்திரித்து, விஜய் ரசிகா்கள் சாா்பில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இதில், ’எம்.ஜி.ஆரின் மறு உருவமே, மாஸ்டா் வாத்தியாரே, அழைக்கறது தமிழகம் தலைமையேற்க’ என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.இந்த சுவரொட்டிகளால் தேனியில் விஜய் ரசிகா்கள் மற்றும் அதிமுகவி னா் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதாக தேனியைச் சோ்ந்த விஜய் ரசிகா் மன்ற நிா்வாகி ஆா்.எஸ்.பிரகாஷ் என்பவா் மீது தேனி காவல் நிலைய காவலா்கள் வழக்கு பதிந்துள்ளனா். சில இடங்களில் விஜய் ரசிகா்கள் ஒட்டியிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com