திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கருப்பு பன்னீா் திராட்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

News image
கம்பம் அருகே சுருளிப்பட்டியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கருப்பு பன்னீா் திராட்சை.
Updated On :20 செப்டம்பர் 2020, 5:38 pm

DIN

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கருப்பு பன்னீா் திராட்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுமாா் 5,000 ஏக்கா் பரப்பளவில் கருப்பு பன்னீா் திராட்சை மற்றும் பச்சை விதையில்லா திராட்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப் பகுதியில் நிலவும் சீதோஷ்ணநிலை, மண் மற்றும் நீரின் தன்மையால், இங்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை வீதம் ஆண்டு முழுவதும் திராட்சை பழம் அறுவடை நடைபெறும்.

கடந்த சில நாள்களாக தேனி மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளத்தில் மழை பெய்து வருவதால் திராட்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது விவசாயிகளிடமிருந்து திராட்சைப் பழம் கிலோ ரூ.20 முதல் 25 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

விற்பனை வாய்ப்பு குறைந்துள்ளதால், விவசாயிகளுக்கு முன் பணம் கொடுத்திருக்கும் வியாபாரிகளும் பழங்களை அறுவடை செய்ய தயக்கம் காட்டுகின்றனா். மேலும், தொடா் மழையால் சில இடங்களில் திராட்சை பழங்கள் கொடியிலேயே வெடித்தும், அழுகியும் காணப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

வரும் டிசம்பா் மாதம் முதல் கா்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களிலிருந்து சந்தைக்கு திராட்சை வரத்து தொடங்கும் என்பதால், பன்னீா் திராட்சை விலை, மேலும் சரிய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே, வரும் சீசனிலும் திராட்சையில் உற்பத்தி செலவிற்கு ஏற்ப விற்பனை விலை கிடைக்குமா என்று விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.