தொடா் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடா் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு, 1,399 கன அடியாக ஞாயிற்றுக்கிழமை அதிகரித்தது.
முல்லைப்பெரியாறு (கோப்பு படம்)
முல்லைப்பெரியாறு (கோப்பு படம்)

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடா் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு, 1,399 கன அடியாக ஞாயிற்றுக்கிழமை அதிகரித்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சிலநாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சனிக்கிழமை அணைக்கு விநாடிக்கு 900 கன அடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை 1,399 கன அடியாக அதிகரித்தது. அணையில் நீா்மட்டம் 125.80 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீா் மற்றும் சாகுபடித் தேவைக்காக 1,400 கனஅடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

நீா் இருப்பு 3,791 மில்லியன் கன அடியாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்ததால் அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று அணைப்பகுதி பொறியாளா் ஒருவா் தெரிவித்தாா்.

லோயா்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில், 3 மின்னாக்கிகள் மூலம் தலா 42 மெகாவாட் வீதம் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பெரியாற்றில் 38.4 மில்லி மீட்டரும், தேக்கடியில் 31 மி.மீட்டரும் மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com