திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கூடலூர் நகராட்சி வளாகத்தில் பெண்கள் முற்றுகைப் போராட்டம்

கூடலூர் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் 50க்கும் மேலான ஆண், பெண்கள் திங்கள்கிழமை தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

News image
கூடலூர் நகராட்சி வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
Updated On :28 செப்டம்பர் 2020, 8:40 am

DIN

கூடலூர் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் 50க்கும் மேலான ஆண், பெண்கள் திங்கள்கிழமை தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு சொந்தமாக குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த திட்டத்தை தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் ரீனா தேவி (19) வேலை செய்து வந்தார். கடந்த செப் 16-ல் ரீனா தேவி பணியில் இருந்த போது இடது கை இயந்திரத்தில் சிக்கி கை சிதைந்தது.

உடன் வேலை செய்தவர்கள் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுபற்றி ரீனா தேவி உறவினர்களுடன் நகராட்சி நிர்வாகத்தினர், பேசும்போது ஒப்பந்ததாரர் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். ஆனால் இன்றுவரை ரீனா தேவிக்கு நகராட்சி நிர்வாகமோ, உரம் தயாரிக்கும் ஒப்பந்ததாரரோ கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.

இதனால் திங்கள்கிழமை ரீனாதேவியின் உறவினர்கள் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து நிவாரணம் தருமாறு முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவல் கிடைத்தவுடன் கூடலூர் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தினகரன் போராட்டம் நடத்தியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பசி நிவாரணம் பெற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார். போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.