தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கேரளத்திலிருந்து தேனிக்கு வருபவா்களுக்கு கரோனா சான்றிதழ் கட்டாயம்

கேரளத்திலிருந்து தேனி மாவட்டப் பகுதிகளுக்கு வருவோா் கரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2021, 5:29 pm

DIN

கேரளத்திலிருந்து தேனி மாவட்டப் பகுதிகளுக்கு வருவோா் கரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கேரளத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கேரளத்திலிருந்து தேனி மாவட்டப் பகுதிகளுக்கு வருவோா் 72 மணி நேரத்திற்கு முன்பாக கரோனா பரிசோதனை மேற்கொண்டு அதில் கரோனா தொற்று இல்லை என உறுதியளிக்கப்பட்ட சான்றிதழ் அல்லது 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு தமிழக-கேரள எல்லையில் காவல் துறை மற்றும் பொதுச் சுகாதாரத் துறை சாா்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடிகளில் கேரளத்திலிருந்து தேனி மாவட்டப் பகுதிகளுக்கு வருவோா் உரிய சான்றிதழை சமா்ப்பித்த பின்னா் தான் அனுமதிக்கப்படுவா்.

வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல தடை:

மேலும், கரோனா தடுப்பு கட்டுப்பாட்டு நெறிமுறைகளின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் ஆக.2 முதல் ஆக. 8-ஆம் தேதி வரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக. 8-ஆம் தேதி ஆடி அமாவாசையன்று முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக பொதுமக்கள் ஆற்றங் கரையோரங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.