இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கம்பத்தில் காற்று ஒலிப்பான்களை அகற்றிய காவல்துறை

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பேருந்துகளில் பயன்படுத்திய காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து காவல்துறை செவ்வாய்க்கிழமை அகற்றினர்.

News image

கம்பத்தில் காற்று ஒலிப்பான்களை அகற்றிய காவல்துறை

Updated On :10 ஆகஸ்ட் 2021, 9:10 am

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பேருந்துகளில் பயன்படுத்திய காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து காவல்துறை செவ்வாய்க்கிழமை அகற்றினர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பொதுமக்களை மிரள வைக்கும் வகையில், பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்பட்ட காற்று ஒலிப்பான்களை  பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் காவல்துறை மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு புகார் அளித்தனர்.

அதன்பேரில் செவ்வாய் கிழமை  பேருந்து பழைய நிலைய சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வை. மனோகரன் மற்றும் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் ஞான பண்டித நேரு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு மற்றும் தனியார் பஸ் மற்றும் லாரிகளில் போக்குவரத்து விதிகளை மீறி பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து வாகனங்களில் விதிகளை மீறி காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.