எஸ்டேட் தொழிலாளா்களுக்கு தனியாக கரோனா பரிசோதனை மையம் அமைக்கக் கோரிக்கை
தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கூலி வேலைக்கு செல்லும் எஸ்டேட் தொழிலாளா்களுக்கு தனியாக கரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கம்பம் நகா்புற சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை கரோனா பரிசோதனை செய்ய திரண்ட தொழிலாளா்கள்.







