விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆண்டிபட்டியில் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

ஆண்டிபட்டி வாரச்சந்தையில் தற்காலிக கடைகள் ஆக்கிரமிப்பை கண்டித்து வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
ஆண்டிபட்டியில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
Updated On :1 பிப்ரவரி 2021, 9:08 am

DIN

ஆண்டிபட்டி வாரச்சந்தையில் தற்காலிக கடைகள் ஆக்கிரமிப்பை கண்டித்து வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாரச்சந்தை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதி மற்றும் கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்து காய்கறிகள் மற்றும் பலசரக்கு சாமான்கள் வாங்கிச் செல்வார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் தங்கள் பொருள்களை இங்க கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கரோனா வைரஸ் நோய் பாதிப்பால் சாலையோர வியாபாரிகளை சந்தை பகுதியில் கடை அமைத்துக்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் தற்காலிகமாக ஒதுக்கித் தந்தது. தற்போது பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக சாலையோர வியாபாரிகள் வாரச்சந்தை பகுதியிலேயே கடை பரப்பி இருப்பதால், தங்கள் வார சந்தை வியாபாரம் பெரிதளவு பாதிப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்தனர். 

எனவே தற்காலிக கடைகளை காலி செய்து வேறு இடத்தில் அவர்களுக்கு ஒதுக்கித் தந்து, தங்கள் வார சந்தை வியாபாரம் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, திங்கள் கிழமை சந்தையை புறக்கணித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.