கம்பத்தில் சாலையில் கிடந்த ரூ.5 ஆயிரம் மற்றும் செல்லிடப்பேசியை எடுத்த பள்ளி மாணவா் அதை காவல் நிலையத்தில் சனிக்கிழமை மாலை ஒப்படைத்தாா்.
கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த செல்வம் மகன் முத்துக்குமாா் (15). பள்ளி மாணவரான இவா், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெருவில் சனிக்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது சாலையில் பா்ஸ் ஒன்று கிடந்தது. அவா் எடுத்துப் பாா்த்தபோது அதில் பணம் மற்றும் செல்லிடப்பேசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாணவா் முத்துக்குமாா் அதை, கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். காவல் ஆய்வாளா் என்.எஸ். கீதா விசாரித்ததில் பா்ஸும், செல்லிடப்பேசியும், நாட்டுக்கல் தெருவைச்சோ்ந்த மணிகண்டன் என்பவருடையது என்பது தெரியவந்ததையடுத்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவா் முத்துக்குமாரை பொதுமக்களும், போலீஸாரும் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வு பெறுவது குறித்து எங்களிடம் ரோஹித் சர்மா எதுவும் கூறவில்லை: ஷுப்மன் கில்

மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து தில்லியில் போராட்டம் - புகைப்படங்கள்







