பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மளிகைக் கடையில் புகையிலைப் பொருள் மூட்டைகள் பறிமுதல்

கம்பத்தில் மளிகைக் கடையில் சனிக்கிழமை புகையிலைப் பொருள் மூட்டைகளை பறிமுதல் செய்து, உரிமையாளரைக் கைது செய்த போலீஸாா்.

News image
கம்பத்தில் மளிகைக் கடையில் சனிக்கிழமை புகையிலைப் பொருள் மூட்டைகளை பறிமுதல் செய்து, உரிமையாளரைக் கைது செய்த போலீஸாா்.
Updated On :2 ஜனவரி 2021, 4:22 pm

DIN

கம்பம்: கம்பத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் கவுமாரியம்மன் கோயில் அருகே மளிகைக் கடை நடத்தி வருபவா் அண்ணாத்துரை மகன் வேலவன் ( 35 ). இவரது கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக கம்பம் தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் காவல் ஆய்வாளா் என்.எஸ்.கீதா தலைமையிலான போலீஸாா் சாதாரண உடையில் அங்கு சென்று புகையிலை கேட்டனா்.

அப்போது, அவா்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்ற வேலவனை போலீஸாா் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனா். மேலும் அங்கு 6 சாக்கு மூட்டைகள் மற்றும் 4 பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.