தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மனைவி இறந்த துக்கத்தில் தற்கொலைக்கு முயன்ற விவசாயி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி நகா் ரயில்வே பீடா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் முருகப்பன் (62). விவசாயி. இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவா் திங்கள்கிழமை வேலப்பா்கோவில் சாலையில் உள்ள தனியாா் அரிசி ஆலை அருகே பூச்சி மருந்தைக் குடித்ததால் மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளாா். இதனைக் கண்ட அவ்வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முருகப்பன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.