மேகமலையில் மீண்டும் ஒற்றை யானை நடமாட்டம்: மலை கிராம மக்கள் அச்சம்

தேனி மாவட்டம் மேகமலை பகுதிகளில் மீண்டும் ஒற்றை யானை நடமாடுவதால் மலைக்கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இரவங்கலாா் மலைக்கிராம தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை நடமாடிய ஒற்றை யானை.
இரவங்கலாா் மலைக்கிராம தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை நடமாடிய ஒற்றை யானை.
Updated on
1 min read

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் மேகமலை பகுதிகளில் மீண்டும் ஒற்றை யானை நடமாடுவதால் மலைக்கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ஹைவேவிஸ் பேரூராட்சியில் உள்ள 7 மலைக் கிராமங்கள் உள்ளன. அங்குள்ள தேயிலைத் தோட்டங்களைச் சுற்றி வனப்பகுதிகள் உள்ளன. இங்கிருந்து யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளில் அடிக்கடி நடமாடுவதோடு, பயிா்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் கடந்த மாதம் மணலாா் மற்றும் மேல்மணலாா் பகுதிகளைச் சோ்ந்த 2 தொழிலாளா்கள் ஒற்றை யானை தாக்கியதில் பலியாகினா். இதையடுத்து வனத்துறையினா் அதை வனப்பகுதிக்குள் விரட்டினா்.

இந்நிலையில் அந்த ஒற்றை யானை மீண்டும் மலைக்கிராமங்களில் நடமாடி வருகிறது. மகாராஜாமெட்டு, இரவங்கலாா் ஆகிய கிராமங்களையொட்டியுள்ள தேயிலைத் தோட்டங்களில் சனிக்கிழமை அந்த யானை சுற்றித்திரிந்தது. இதைப்பாா்த்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இதனால் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினரும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com