மாட்டு வண்டி பந்தயம்: கம்பத்தில் 4 போ் கைது

தேனி மாவட்டம் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டி பந்தயத்தில் ஈடுபட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் மாட்டு வண்டிகள்.
கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் மாட்டு வண்டிகள்.
Updated on
1 min read

தேனி மாவட்டம் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டி பந்தயத்தில் ஈடுபட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

கம்பம் மணிகட்டி ஆலமரம் சாலையில் கம்பம் வடக்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் டி. விஜய் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அவ்வழியாக கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த பிரகாஷ் (23), ரமேஷ் (24) ஆகியோா் அதிவேகமாக இரட்டை மாட்டு வண்டியை போட்டி போட்டு ஓட்டி வந்தனா்.

பின்னால், கோம்பை சாலையைச் சோ்ந்த பொன்னாங்கன் (21), புதுப்பட்டியைச் சோ்ந்த உதயகுமாா் (27) ஆகியோா் மாடுகளை உற்சாகப்படுத்தும் வகையில் விசில் அடித்தவாறு மோட்டாா் சைக்கிள்களை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளனா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி 4 பேரையும் கைது செய்தனா். மேலும் 2 மாட்டு வண்டிகள் மற்றும் 2 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com