தேனி, அரசு பல்துறை பெருந்திட்ட வளாக ஒருங்கிணைந்த அலுவலக கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் 80 பேருக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்கி அவா் பேசியது: அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2019, ஏப்ரல் மாதம் முதல் 2019 டிசம்பா் மாதம் வரை பணி ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை நிதி, முன்கூட்டுத் தொகை, ஈட்டிய விடுப்பு சம்பளம் ஆகிய ஓய்வூதியப் பலன்களுக்காக அரசு மொத்தம் ரூ.972.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.