விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இருடியம் மோசடி: போடி நபரைக் கடத்தியதாக மானாமதுரையைச் சேர்ந்த 2 பேர் கைது

போடியில் இருடியம் கும்பகலசம் தருவதாக ரூ 3.5 கோடி மோசடி செய்த நபரைக் கடத்தியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image
கைதான இருவர்.
Updated On :17 ஜூலை 2021, 3:12 pm

DIN

போடியில் இருடியம் கும்பகலசம் தருவதாக ரூ 3.5 கோடி மோசடி செய்த நபரைக் கடத்தியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தபுரம் பைபாஸ் ரோட்டில் வசித்து வருபவர் தங்கமுத்து மகன் குட்டி என்ற ராஜீவ்காந்தி (39) இவரிடம் தேனி மாவட்டம் போடி தாலுகா பொட்டல்களம்  மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சஞ்சீவி மகன் கெளவுர் மோகன்தாஸ் (48) என்பவர் இரிடியம், கோபுர கும்பக் கலசம் தருவதாகக் கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு ரூ 3.5 கோடி வாங்கியுள்ளார்.

அதன் பின்னர் இவர் குட்டி என்ற ராஜீவ்காந்திக்கு இரிடியம், கோபுர கலசத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் குட்டி என்ற ராஜீவ் காந்தி இருடியம், கும்ப கலசத்தை தாருங்கள் அல்லது நான் கொடுத்த பணத்தை கொடுங்கள் என கெளவுர் மோகன்தாஸிடம் கேட்டு வந்துள்ளார்.

Story image

மீட்கப்பட்ட கெளவுர் மோகன்தாஸ்.

ஆனால் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த குட்டி என்ற ராஜீவ் காந்தி தனது நண்பர்கள், உறவினர்கள் என 10 பேருடன் கார்களில் போடி பொட்டகளம் மீனாட்சிபுரத்துக்குச் சென்று கெளவுர் மோகன்தாஸை காரில் கடத்தி கொண்டு வந்து மானாமதுரையில் தனது வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் கெளவுர் மோகன்தாஸ் மனைவி புகார் செய்தார். அதன்பேரில் போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் மானாமதுரைக்கு வந்து இங்குள்ள போலீசார் உதவியுடன் குட்டி என்ற ராஜீவ்காந்தி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கெளவுர் மோகன்தாஸை மீட்டனர்.

இவரை கடத்திக் கொண்டு வந்து வீட்டில் அடைத்து வைத்ததாக குட்டி என்ற ராஜீவ் காந்தி மானாமதுரை அருகே கஞ்சிமடை கிராமத்தைச் சேர்ந்த சபரிமலை மகன் ராஜேந்திரன்(48) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதன்பின் மூவரையும் போலீசார் விசாரணைக்காக போடிக்கு கூட்டிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.