திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கம்பம் கூடலூர் பகுதிகளில் கந்தர் சஷ்டி வழிபாடு

​கந்த சஷ்டியை முன்னிட்டு கம்பம் சுருளிவேலப்பர் திங்கள்கிழமை ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

News image
Updated On :8 நவம்பர் 2021, 12:45 pm

DIN


கந்த சஷ்டியை முன்னிட்டு கம்பம் சுருளிவேலப்பர் திங்கள்கிழமை ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தேனி மாவட்டம் கம்பத்தில் கந்த சஷ்டியை முன்னிட்டு கம்பராயப் பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள  சண்முகநாதர், சுருளிவேலப்பர் என்ற சுப்பிரமணிய சுவாமி, கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ பாலமுருகன், ஆதிசக்தி விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமி, கூடலூர் சுந்தர வேலவர், லோயர் கேம்ப்பில் உள்ள வழிவிடு முருகன், காமயகவுண்டன் பட்டி பாட்டையா கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி ஆகிய கோயில்களில் கந்தர் சஷ்டி விழா நவ. 4  முதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காப்பு கட்டுதலுடன் தொடங்கி நாள்தோறும் பால், பன்னீர், தயிர், இளநீர், தேன், விபூதி உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி திங்கள்கிழமை கம்பம் சுருளிவேலப்பர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.