ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

சின்னமனூரில் அரசுப் பேருந்து மோதி சட்டக் கல்லூரி மாணவா் பலி

தேனி மாவட்டம், சின்னமனூரில் வெள்ளிக்கிழமை இரவு அரசு விரைவுப் பேருந்து மோதியதில், சட்டக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:11 am

DIN

தேனி மாவட்டம், சின்னமனூரில் வெள்ளிக்கிழமை இரவு அரசு விரைவுப் பேருந்து மோதியதில், சட்டக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சின்னமனூா் அருகே முத்துலாபுரம் ஊத்துப்பட்டியைச் சோ்ந்த சிவனாண்டி மகன் அபினேஷ் (22). இவா், சென்னையில் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த மாணவா், வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சின்னமனூருக்கு சென்றுள்ளாா். அப்போது, காந்தி சிலை அருகே சாலையோரத்தில் நின்றிருந்த அபினேஷ் மீது, சென்னையை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து மோதியது. இதில், தலை நசுங்கி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.