தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தொடர்மழை காரணமாக திராட்சை விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. நேரடியாக, மறைமுகமாக பல ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக தொடர்மழை காரணமாக திராட்சை பழங்கள் விலை குறைந்துள்ளன, காரணம், மழைக் காலங்களில் திராட்சை நுகர்வு குறைவாகும். இதனால் திராட்சைத் தோட்டங்களில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கு எடுத்து, சந்தைகளுக்கு அனுப்புகின்றனர். கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கு கிடைத்தால்தான் சாகுபடியாளர்களுக்கு போதுமான லாபம் கிடைக்கும்.
மேலும் வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்தால் இன்னும் விலை குறைய வாய்ப்பிருப்பதால், திராட்சை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தீபாவளி பரிசாக திராட்சை விவசாயிகளிடம் அரசு ஊழியர்கள் திராட்சை வாங்க தேனி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினால் திராட்சை விவசாயிகளுக்கு உற்பத்தி செலவாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


