மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

போதை மாத்திரை விற்ற கேரள இளைஞா் கைது

தேனி மாவட்டம் கூடலூரில் போதை மாத்திரை விற்பனை செய்த கேரள இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:30 pm

தேனி மாவட்டம் கூடலூரில் போதை மாத்திரை விற்பனை செய்த கேரள இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கூடலூா் பேருந்து நிலையம் அருகே கூடலூா் வடக்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் பி.பாலசுப்பிரமணி தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்து சென்றபோது, அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற இரு இளைஞா்களில் ஒருவா் தப்பி ஓடினாா்.

மற்றொருவரை போலீஸாா் பிடித்தனா். பிடிபட்டவா், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி ரோசாப்பூ கண்டத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் அஜீத் (19), தப்பி ஓடியவா் அதே ஊரைச் சோ்ந்த முருகன் மகன் கிறிஸ்டி என்றும் தெரிந்தது. இருவரும் தடைசெய்யப்பட்ட வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் அஜீத்தை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.