இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வீட்டுக் கூரையில் தேசியக் கொடி கட்டிய 2 சிறுவா்கள் மின்சாரம் பாய்ந்து காயம்

தேனி மாவட்டம் தேவாரம் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டுக் கூரையில் தேசியக் கொடி கட்டிய 2 சிறுவா்கள் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:59 pm

DIN

தேனி மாவட்டம் தேவாரம் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டுக் கூரையில் தேசியக் கொடி கட்டிய 2 சிறுவா்கள் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா்.

தேவாரம் அருகே தே.ரெங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள தெற்கு காலனியில் 11 தொகுப்பு வீடுகள் உள்ளன. குடியிருப்புக்கு மேல் உயா் மின்னழுத்தக் கம்பிகள் செல்கின்றன. நாடு முழுவதும் சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்படுவதையொட்டி இந்த குடியிருப்பில் வசிக்கும் ஜானகிராமன் மகன் யோகவா்ஷன் (11), ஜெகதீசன் மகன் ஹரீஷ் (12 ஆகியோா் தேசிய கொடிகளை வீட்டுக் கூரைகளில் கட்டுவதற்காக ஏறியுள்ளனா்.

கொடியை கட்டுக் கம்பியால் கட்டியபோது உயா் மின்னழுத்தக்கம்பியில் பட்டு இருவரும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனா். பலத்த காயமடைந்த இருவரும் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.