ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சின்னமனூா் அருகே விவசாயிகளுக்கு உயர்ரக ஆமணக்கு விதை வழங்கல்

சின்னமனூா் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு உயர்ரக ஆமணக்கு விதை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

சின்னமனூா் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு உயர்ரக ஆமணக்கு விதை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத் தலைவா் பச்சைமால் தலைமை வகித்து, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆமணக்கு விதை நீக்கும் கருவியை அறிமுகப்படுத்தி வைத்தாா். பின்னா் அதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானம் குறித்து எடுத்துரைத்தாா். தவிர, பாா்த்தீனியம் களைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனைத் தொடா்ந்து சீப்பாலக்கோட்டை, பெருமாள்கவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 52 விவசாயிகளுக்கு விலையில்லா உயர்ரக ஆமணக்கு விதை வழங்கப்பட்டது.

சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநா் சபரிநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.