கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

போடியில் வேட்பாளர்களை அலைக்கழித்த நகராட்சி அதிகாரிகள்

போடியில் ஆவணங்களின் நகல், அசல் மாற்றி மாற்றி கேட்டு நகராட்சி தேர்தல் அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்ததால் வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

News image
வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள்
Updated On :3 பிப்ரவரி 2022, 7:48 am

DIN

போடி: போடியில் ஆவணங்களின் நகல், அசல் மாற்றி மாற்றி கேட்டு நகராட்சி தேர்தல் அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்ததால் வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போடி நகராட்சியில் 33 வார்டுகளுக்கு மூன்று உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

இதில் வியாழன்கிழமை அதிமுகவினர் உள்ளிட்ட சில அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது ஏற்கனவே நகராட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகள் அறிவித்தபடி ஆவணங்களை தயார் செய்து வேட்பு மனுத் தாக்கல் செய்ய சென்றபோது கூடுதலாக புகைப்படம், நகல் ஆவணங்கள், அசல் ஆவணங்கள் கேட்டு பல முறை அலைக்கழிப்பு செய்தனர்.

Story image

வேட்பு மனுத் தாக்கல் செய்பவருடன் கூடுதல் நபர் அனுமதிக்காததால் வேட்பாளரே வெளியில் வந்து ஆவணம் தயார் செய்து உள்ளே செல்ல வேண்டி உள்ளது.

ஒரே முறையில் என்னென்ன ஆவணம் தேவை என்பதை தெளிவாக கூறாததை கண்டித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் சமாதான படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.