கர்னல் பென்னிகுயிக் மணிமண்டபம் 181 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரிப்பு
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்தநாள் விழா சனிக்கிழமை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது அதற்காக மணிமண்டபம் வெள்ளிக்கிழமை மின்னொளியில் ஜொலித்தது.


தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்தநாள் விழா சனிக்கிழமை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது அதற்காக மணிமண்டபம் வெள்ளிக்கிழமை மின்னொளியில் ஜொலித்தது.
முல்லை பெரியாறு அணையை கட்டிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் கட்டிய அணையால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்கள் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக பயன்படுத்துகின்றனர்.
மேலும் ஐந்து மாவட்டங்களிலும் கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவைப் போற்றுகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி 15 அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும் தமிழக அரசு லோயர் கேம்ப்பில் அவருக்காக முழு உருவ வெண்கலச் சிலை, மணிமண்டபம் அமைத்து அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.
சனிக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். உடன் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...