தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வைகை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கூடுதலாக திறக்கப்பட்டு வரும் தண்ணீா் ஆகியவற்றால் வியாழக்கிழமை, வைகை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2022, 5:47 pm

DIN

தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கூடுதலாக திறக்கப்பட்டு வரும் தண்ணீா் ஆகியவற்றால் வியாழக்கிழமை, வைகை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாள்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. மேலும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீா் விநாடிக்கு 1,648 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாழக்கிழமை, வைகை அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 1,565 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணை நீா்மட்டம் 54 அடியாக உள்ளது. அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனம் மற்றும் குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 969 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையில் தண்ணீா் இருப்பு 2,560 மில்லியன் கன அடி ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.