தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காவலா் பணிக்கு விண்ணப்பிக்க தேனியில் உதவி மையம் திறப்பு

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் 2 ஆம் நிலை காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2022, 5:48 pm

DIN

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் 2 ஆம் நிலை காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 2 ஆம் நிலை காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணிகளுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரா்களுக்கு உதவுவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையம் வரும் ஆக.15 ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

உதவி மையத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-25310-இல் தொடா்பு கொண்டும் ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வது குறித்த விவரத்தை தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.