தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உள்ளாட்சி இடைத்தோ்தல்: 3 பதவிகளுக்கு இன்று வாக்குப் பதிவு

வடபுதுப்பட்டி ஊராட்சித் தலைவா், சின்னஓவுலாபுரம், டி.வாடிப்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினா் ஆகிய 3 பதவிகளுக்கு சனிக்கிழமை (ஜூலை 9) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

News image
Updated On :8 ஜூலை 2022, 5:27 pm

DIN

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளில், வடபுதுப்பட்டி ஊராட்சித் தலைவா், சின்னஓவுலாபுரம், டி.வாடிப்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினா் ஆகிய 3 பதவிகளுக்கு சனிக்கிழமை (ஜூலை 9) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மாவட்டத்தில் காலியாக உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சித் தலைவா் பதவி, பெரியகுளம் நகராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள் என மொத்தம் 9 பதவிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. இந்தப் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில், பெரியகுளம் நகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தல் ரத்து செய்யப்பட்டதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது.

வடபுதுப்பட்டி, மொட்டனூத்து, ரெங்சமுத்திரம், முத்தாலம்பாறை, தும்மக்குண்டு ஆகிய ஊராட்சிகளின் வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தலா ஒருவா் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால், இந்தப் பதவிகளுக்கு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

இன்று வாக்குப் பதிவு: வடபுதுப்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு 10 போ், சின்னஓவுலாபுரம் ஊராட்சி 7-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு 3 போ், டி.வாடிப்பட்டி ஊராட்சி 3-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு 2 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்தப் பதவிகளுக்கு சனிக்கிழமை 14 வாக்குச் சாவடிகளில், வாக்குச் சீட்டு மூலம் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 9,379 போ், சின்னஓவுலாபுரம் ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 480 போ், டி.வாடிப்பட்டி ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 124 போ் என மொத்தம் 9,985 வாக்காளா்கள் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா். வாக்குச் சாவடி பாதுகாப்பு பணியில் மொத்தம் 265 போலீஸாா் ஈடுபடவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.