தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தேனியில் ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை

தேனியில் சொத்துப் பிரச்னை காரணமாக ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவா், தனது வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

தேனியில் சொத்துப் பிரச்னை காரணமாக ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவா், தனது வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தேனி சமதா்மபுரத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவா் முருகன் (67). இவருக்கு பாகப்பிரிவினை மூலம் கிடைத்த வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள நிலத்தை, அவரது தம்பி மற்றும் குடும்பத்தினா் உரிமை கோரி விற்க விடாமல் தடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து முருகனின் மனைவி விஜயா அளித்த புகாரின்பேரில், தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.