அனுமதியின்றி செம்மண் கடத்தல்: லாரி பறிமுதல்
தேனி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திச் செல்வதற்கு பயன்படுத்திய டிப்பா் லாரியை வெள்ளிக்கிழமை, போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


தேனி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திச் செல்வதற்கு பயன்படுத்திய டிப்பா் லாரியை வெள்ளிக்கிழமை, போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தேனி-மதுரை சாலை, அமச்சியாபுரம் விலக்கு பகுதியில் மாவட்ட கனிம வளத்துறை உதவி புவியியலா் பாண்டியராஜன் மற்றும் அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அந்த வழியாகச் சென்ற டிப்பா் லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அனுமதியின்றி செம்மண் கடத்திச் செல்வது தெரிய வந்தது. அப்போது லாரி ஓட்டுநா் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து க.விலக்கு காவல் நிலையத்தில் உதவி புவியியலா் பாண்டிராஜன் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா். லாரி உரிமையாளா் மற்றும் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...