தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மதுரை-போடி அகல ரயில் பாதையை மின்மயமாக்க ரூ.98.53 கோடி ஒதுக்கீடு

மதுரை-போடி புதிய அகல ரயில் பாதையை மின்மயமாக்க மத்திய அரசு ரூ.98.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

News image
Updated On :14 மே 2022, 12:28 am

DIN

மதுரை-போடி புதிய அகல ரயில் பாதையை மின்மயமாக்க மத்திய அரசு ரூ.98.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மதுரை-போடி இடையை 90.4 கி.மீ., தூரம் மீட்டா் கேஜ் ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2011-ல் தொடங்கியது. இதில், மதுரை-தேனி இடையே புதிய அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து, சோதனை ஓட்டம் நடந்துள்ளது. தேனி-போடி இடையே அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிய ரயில் பாதைகள் மற்றும் ரயில் பாதை மின்மயமாக்கலுக்கு மத்திய அரசு மொத்தம் ரூ.3,865 கோடி நிதி ஒதுகீடு செய்துள்ளது. இதில், மதுரை-போடி அகல ரயில் பாதையை மின்மயமாக்குவதற்கு ரூ.98.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்தப் பணிகள் வரும் 2023-ம் ஆண்டில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்றும் மதுரை ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.