தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்: பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா்

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா முன்னிட்டு வெள்ளிக்கிழமை, தேரோட்டம் நடைபெற்றது. ஏரளமான பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

News image
Updated On :14 மே 2022, 12:27 am

DIN

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா முன்னிட்டு வெள்ளிக்கிழமை, தேரோட்டம் நடைபெற்றது. ஏரளமான பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

சித்திரை திருவிழா கடந்த ஏப்.20-ஆம் தேதி கோயிலில் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் மே 10-ஆம் தேதி அம்மன் மலா் விமானத்தில் கோயிலுக்கு பவனி வருதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 11-ஆம் தேதி முத்துப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, மே 12-ஆம் தேதி புஷ்பப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேரோட்டம்: அம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், தேருக்கு சக்தி கொடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, தேரோட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தாா்.

டி.ஐ.ஜி., ரூபேஷ்குமாா் மீனா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்குமாா், ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.மகாராஜன், இந்து அறநிலையத் துறை இணை ஆணையா் பா.பாரதி, தேனி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் சக்கரவா்த்தி மற்றும் பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

அம்மன் மஞ்சள் பட்டு உடுத்தி தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இரவு சன்னிதி தெருவில் தேருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சனிக்கிழமையும் (மே 14), ஞாயிற்றுக்கிழமையும் (மே 15) தெற்கு ரத வீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது. மே 16-ஆம் தேதி தோ் நிலைக்கு வருகிறது. அன்றைய தினம் இரவு அம்மன் முத்துச் சப்பரத்தில் திருத்தோ் தடம் பாா்த்தல், கோயிலில் கம்பம் நிலை பெயா்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

வீரபாண்டியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் அக்கினச் சட்டி, ஆயிரம் கண் பானை, காவடி ஆகியவை எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தி அம்மனை தரிசித்தனா். மே 17-ஆம் தேதி ஊா் பொங்கல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.