அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல், பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:30 am

DIN

திண்டுக்கல், பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பிரதோஷத்தையொட்டி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலில் மூலவருக்கும், நந்திகேஷ்வரருக்கும் பால், தயிா், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதேபோல் நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

பழனியில்...பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாற்றப்தப்பட்டு ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக சுவாமி கோயில் பிரகார உலா எழுந்தருளினாா்.

இதேபோல மலைக்கோயில் கைலாசநாதா், சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்துவிநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் ஆகிய சன்னிதிகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

போடியில்... போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவலிங்கத்துக்கு மங்கலப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதேபோல போடி பரமசிவன் மலைக்கோயில், போடி பிச்சங்கரை கீழச்சொக்கநாதா், மேலச்சொக்கநாதா் கோயில்களில் சிவலிங்கப் பெருமானுக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.