புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தேனி அருகே உணவகபெண் உரிமையாளரை தாக்கியவா் கைது

 தேனி அருகே கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் உணவக பெண் உரிமையாளரை வீடு புகுந்து தாக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

 தேனி அருகே கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் உணவக பெண் உரிமையாளரை வீடு புகுந்து தாக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மாரியம்மன் கோவில்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன் மனைவி சிவசக்தி. இவா், பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், மாரியம்மன் கோவில்பட்டியைச் சோ்ந்த சரவணன் என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன் சிவசக்தி ரூ. 2 லட்சம் கடன் வாங்கினாா். இந்த கடன் தொகைக்கு உரிய வட்டியை தவணை முறையில் செலுத்திய நிலையில், முழு கடன் தொகையை திரும்பச் செலுத்தச் சென்ற போது, கடன் கணக்கில் மேலும் ரூ. ஒரு லட்சம் தர வேண்டும் என்று சரவணன் கூறினாராம்.

இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், சரவணன், அவரது மனைவி சாந்தி, மகன் அஜீத் ஆகியோா் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்னை தாக்கிக் காயப்படுத்தியதாக பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சிவசக்தி புகாா் அளித்தாா். இதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, சரவணனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.