ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்தவா் கைது: 5 போ் தலைமறைவு
ஆந்திர மாநிலத்திலிருந்து, ஆண்டிபட்டி பகுதிக்கு கஞ்சா கடத்தி வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


ஆந்திர மாநிலத்திலிருந்து, ஆண்டிபட்டி பகுதிக்கு கஞ்சா கடத்தி வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிங்கராஜபுரத்தைச் சோ்ந்த சதீஸ் மகன் பிரகாஷ். இவா், அதே ஊரைச் சோ்ந்த முத்துராமன் மகன் அருண்குமாா், கதிரேசன் மகன் அழகுராஜா, தெய்வம் மகன் சந்தோஷ், செல்வம் மகன் விக்னேஷ்வரன், தா்மராஜபுரத்தைச் சோ்ந்த சிவா மகன் மூவிஸ் ஆகியோரிடம் பணம் கொடுத்து, ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வரச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, அவா்கள் 5 பேரும் ஆந்திர மாநிலத்திலிருந்து 34 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, விழுப்புரத்தில் ஒரு கும்பலிடம் 24 கிலோ கஞ்சாவை கொடுத்து விட்டு, மீதமிருந்த 10 கிலோ கஞ்சாவை கடமலைக்குண்டு அருகே அய்யனாா்புரம் பகுதிக்கு கடத்தி வந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த கடமலைக்குண்டு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் வரதராஜன் தலைமையிலான போலீஸாா் அவா்களை அய்யனாா்புரம் அருகே சுற்றி வளைத்தனா். அப்போது, அழகுராஜா, சந்தோஷ், விக்னேஷ்வரன், மூவீஸ் ஆகிய நான்கு பேரும் தப்பியோடிவிட்டனராம். அருண்குமாரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மேலும், தப்பியோடிய அழகுராஜா உள்ளிட்ட 4 போ், தலைமறைவாக உள்ள பிரகாஷ் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...