பள்ளி மாணவா்களுக்கு நவ.5-இல் கலைப் போட்டி
தேனி அருகே முத்துத்தேவன்பட்டி, ஆா்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் வரும் நவ.5-ஆம் தேதி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது.


தேனி அருகே முத்துத்தேவன்பட்டி, ஆா்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் வரும் நவ.5-ஆம் தேதி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
கலை பண்பாட்டுத் துறை சாா்பில் ஜவஹா் மன்றம் மூலம், கலைத் துறையில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெறும் போட்டிகளில் 5 முதல் 16 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
குரலிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.
போட்டிகள் குறித்த விவரத்தை கலை பண்பாட்டுத் துறை மதுரை மண்டல அலுவலகம், தொலைபேசி எண்: 0452-2566420, கைப்பேசி எண்: 98533 47274 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...