புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தேனியில் ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

 தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை, விதிகளுக்கு புறம்பாக ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவை ரத்து

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:24 pm

DIN

 தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை, விதிகளுக்கு புறம்பாக ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் 2-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

தேனி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியா்களுக்கு விதிகளுக்கு மாறாக வழங்கப்பட்ட பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும், பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை, காத்திருக்கும் போராட்டம் தொடங்கியது.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் கலாவதி பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்படாததால், மாவட்டத் தலைவா் சீனிவாசன் தலைமையில் ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.