மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை, மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ஆண்டிபட்டி வட்டாரம், ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ராஜேந்திராநகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை, மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தொடக்கி வைத்தாா்.

மாவட்டத்தில் முதல் கட்டமாக க. மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 51 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 51 பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் 1,342 மாணவா்கள், 1,291 மாணவிகள் என மொத்தம் 2,633 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

ராஜேந்திராநகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் க. பிரிதா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) தாமரைக்கண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் அண்ணாதுரை, க. மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் எஸ். சித்ரா, ஆத்தங்கரைபட்டி ஊராட்சித் தலைவா் பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.