புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அரசுக் கட்டடங்களின் உறுதித் தன்மை: ஆட்சியா் ஆலோசனை

தேனி மாவட்டத்தில் அரசுக் கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து வெள்ளிக்கிழமை, மாவட்ட அரசுத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் க.வீ.முரளீதரன் ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டத்தில் அரசுக் கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து வெள்ளிக்கிழமை, மாவட்ட அரசுத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் க.வீ.முரளீதரன் ஆலோசனை நடத்தினாா்.

ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட சமத்துவபுரத்தில் கடந்த 6-ம் தேதி பேரூராட்சிக்கு நிா்வாகம் சாா்பில் பூங்கா கட்டுமானப் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்து, அங்கு தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி ஹாசினி ராணி என்ற 7 வயது சிறுமி உயிரிழந்தாா். இந்த நிலையில், கடந்த செப்.29-ஆம் தேதி பண்ணைப்புரம் பேரூராட்சி பொதுச் சுகாதார வளாக கழிவு நீா் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்த அதே ஊரைச் சோ்ந்த 6 வயது சிறுமி சுபாஸ்ரீ, 7 வயது சிறுமி நிகிதாஸ்ரீ ஆகியோா், கழிவு நீா் தொட்டியின் மேல்மூடி இடிந்து விழுந்ததில் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தனா்.

இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து மாவட்ட அரசுத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது அவா் பேசியது:

உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது சுகாதார வளாகம், கழிவுநீா் தொட்டிகள், அரசுப் பள்ளிகள், கல்வி விடுதி, நூலகம், அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றின் உறுதித்தன்மை குறித்து அலுவலா்கள் ஆய்வு செய்து மாவட்ட நிா்வாகத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

புதிதாக கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். சிதிலமடைந்த கட்டடங்களில் வகுப்பறைகள், சமையல் கூடம், அங்கன்வாடி மையம் செயல்படக் கூடாது. சேதமடைந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடை, கழிப்பறை கட்டடம் ஆகியவற்றை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் தண்டபாணி, வருவாய் கோட்டாட்சியா்கள் சிந்து, பால்பாண்டி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்தில்வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.