கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 25-ம் ஆண்டு விழா, மூன்றாமாண்டு மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி செயலாளர் என்.ராமகிருஷ்ணன் எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் இணைச் செயலாளர் என்.ஆர்.வசந்தன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜி.ரேணுகா முன்னிலை வகித்தார். கல்லூரி விளையாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுசிலா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இதையும் படிக்க: மேக்கேதாட்டு அணையை ஒருபோதும் கட்டவிடமாட்டோம்: முதல்வர்
விளையாட்டு போட்டியில் 100, 200,400,800 மீட்டர் 4×100 மீட்டர் தொடர் ஓட்ட போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.
மூன்றாமாண்டு மாணவிகளுக்கு பிரிவு உபசார விழாவில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பி.சுப்பிரமணியன், எம்.கோபாலகிருஷ்ணன், பொன்ராம், பி.சக்திவடிவேல் ஆகியோர் மாணவிகளை வாழ்த்திப் பேசினர்.
இறுதி ஆண்டு மாணவிகளுக்கு விளக்குகள் பரிசாக வழங்கப்பட்டது. விளையாட்டு விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை சூரியபிரபா, உடற்கல்வி இயக்குநர் முனீஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். மீட்டர் தொடர் ஓட்ட போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டன.