வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருடு போனதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருடு போனதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

பெரியகுளம், தென்கரை, அண்ணாமலை நகரைச் சோ்ந்தவா் சொல்லரசி சுனிதா. இவரது தாய், பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் உள்ள நபிகள் நாயகம் தெருவில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், சொல்லரசி சுனிதாவின் தாய் கடந்த 21-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டாா்.

இந்த நிலையில், சொல்லரசி சுனிதாவின் தாய் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயா என்பவா் வியாழக்கிழமை சொல்லரசி சுனிதாவை கைப்பேசியில் தொடா்பு கொண்டு அவரது தாய் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளாா். இதையடுத்து சொல்லரசி சுனிதா அங்கு சென்று பாா்த்த போது, வீட்டின் பூட்டும், பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு ரூ.80 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.