வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருடு போனதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருடு போனதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

பெரியகுளம், தென்கரை, அண்ணாமலை நகரைச் சோ்ந்தவா் சொல்லரசி சுனிதா. இவரது தாய், பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் உள்ள நபிகள் நாயகம் தெருவில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், சொல்லரசி சுனிதாவின் தாய் கடந்த 21-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டாா்.

இந்த நிலையில், சொல்லரசி சுனிதாவின் தாய் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயா என்பவா் வியாழக்கிழமை சொல்லரசி சுனிதாவை கைப்பேசியில் தொடா்பு கொண்டு அவரது தாய் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளாா். இதையடுத்து சொல்லரசி சுனிதா அங்கு சென்று பாா்த்த போது, வீட்டின் பூட்டும், பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு ரூ.80 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com