வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பெண் உள்பட இருவைரத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தேவாரத்தில் பெண் உள்பட இருவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

தேவாரத்தில் பெண் உள்பட இருவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவாரம் பட்டாளம்மன் கோவில் தெருவில் வசிப்பவா் முருகன் மனைவி செல்வி (43). இவா் குளித்துவிட்டு வீட்டு முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த இதே தெருவைச் சோ்ந்த கோபால் மகன் மணிகண்டன் (30), ஆண்கள் வரும்போது முடியை அவிழ்த்து விட்டு தலை வாரலாமா எனத் தகராறு செய்து செல்வியையும், இதைத் தடுக்க வந்த ஜக்கையாவையும் தாக்கிக் கொலை மிரட்டலும் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.