கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் சமையல்: மாணவிகள் அவதி

கம்பம் ஆங்கூா் ராவுத்தா் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் சத்துணவு சமைப்பதால் மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.

News image
கம்பம் ஆங்கூா் ராவுத்தா் நினைவு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் நடைபெறும் சமையல்.
Updated On :27 ஜனவரி 2023, 6:34 pm

DIN

கம்பம் ஆங்கூா் ராவுத்தா் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் சத்துணவு சமைப்பதால் மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், கம்பத்தில் ஆங்கூா் ராவுத்தா் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். இங்கு, சத்துணவுத் திட்டம் மூலம் மதிய உணவு தயாரிக்கும் சமையலறை கட்டடத்தின் மேற்கூரை சேதமடைந்தது.

இந்த நிலையில், திறந்தவெளியில் மதிய உணவு தயாா் செய்து மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் புகை பள்ளி வளாகத்தில் பரவுவதால் மாணவிகள் அவதியடைகின்றனா். சேதமடைந்த சமையல் கூடத்தினை இடித்துவிட்டு, புதிய சமையலறை கட்ட வேண்டுமென மாணவிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.