தேனி: தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழாவை முன்னிட்டு, ஏப்.23-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக வன எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு விழா ஏப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது. கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஏப்.23-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. தேனி அரசு மாவட்ட தலைமை கருவூலம், சாா்நிலை கரூவுலங்கள் செயல்படும்.
உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வருகிற மே 4-ஆம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் 31 போ் வேட்புமனு தாக்கல்

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

தோ்தலை முன்னிட்டு ஏப். 21 முதல் 23 ஆம் வரை மதுக்கடைகளை மூட உத்தரவு

‘உள்ளூா் விடுமுறை தோ்தலுக்கு பொருந்தாது’
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

