கம்பம்: தேனி மாவட்டம், கூடலூரில் தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளா் தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா தினகரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் போசியதாவது: சிலா் செய்த துரோகத்தால் 14 ஆண்டுகள் கழித்து இங்கு வந்துள்ளோம், தேனி மக்கள் பாசமானவா்கள் அவா்களை நம்பலாம் என்று கூறி என் கணவா் என்னை இங்கு அனுப்பி வைத்தாா். உங்களிடம் நீதிக் கேட்டு வந்துள்ளேன். துரோகம் செய்தவா்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். குக்கா் சின்னத்துக்கு வாக்களியுங்கள், உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் என்றாா்அவா்.
பின்னா், பிரசார வாகனத்தை விட்டு கீழே இறங்கி, அங்கு கூடியிருந்த பெண்கள், குழந்தைகளுடன் தற்படம் எடுத்துக்கொண்டாா். இதையடுத்து, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்தாா்.
எம்ஜிஆா் மன்ற மாவட்ட செயலா் பி.ராமா், ஓபிஎஸ் அணி நகர செயலா் ஏ.சின்னமாயன், அமமுக நகரச் செயலா் பா.கெளதம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அரியலூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரசாரம்

புதுச்சேரி தோ்தல் பிரசாரத்துக்கு பாஜக தேசியத் தலைவா்கள் வருகை

அமமுக வேட்பாளர்களை ஆதரித்து ஏப். 6 முதல் டிடிவி தினகரன் பிரசாரம்!

9 ஆண்டுகளுக்குப் பின்னா் அதிமுக தலைமை அலுவலகத்தில் டி.டி.வி.
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


